சென்னை:

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபலமான உணவகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2வது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது.

பிரபல உணவகங்களான சரவண பவன், ஹாட் சிப்ஸ், அஞ்சப்பர், கிராண்ட் சுவீட்ஸ், ஹாட் பிரட் உள்பட பல்வேறு உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள், அவர்களது உறவினர்களின் வீடுகள் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்தே இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனையின் போது பல்வேறு ஆவனங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.