சென்னை,

ன்று சசிகலா உறவினர்களின் வீடுகள், நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனை  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுவதாகவும், இதற்கு ஓபிஎஸ்தான் காரணம்,  இதை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று டிடிவி ஆதரவு தங்கத்தமிழ் செல்வன் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது,

டி.டி.வி. தினகரன், திவாகரன் குடும்பத்தினர் வீடுகள், ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. இதுபோன்ற சோதனைகள்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.

துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் தூண்டுதலின் பேரில் தான் இந்த சோதனை நடத்தப்படுகிறது. ஜெயா டிவி என்பது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் தொடங்கப்பட்டதாகும். இந்த தொலைக்காட்சியில் பெயர் வராதா என ஏங்கிய வர்கள் ஏராளம். ஆனால், தற்போது ஜெயா டிவி அலுவல கத்திலேயே வருமான வரி அதிகாரிகளை வைத்து சோதனை நடத்து கின்றனர். அதிகார மமதையில் செயல்பட்டு வரும் இவர்கள், அரசு அதிகாரத்தை தவறான நோக்கத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

கருப்பு பணத்தை கண்டறியும் வகையில் சோதனை நடத்துவதாக வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர். மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு டைரியை கைப்பற்றினார்கள். ஆனால், அந்த டைரியில் இடம்பெற்ற வர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்?

இதேபோல் கரூர் அன்புநாதன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெறாதது ஏன்? இதற்கு வருமான வரித்துறை விளக்கம் அளிக்க தயாரா?

வருமான வரித்துறை அதிகாரிகளால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனையானது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி நிறைந்ததாகும். இதனை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. அதிமுக தொண்டர்களும் இதனை மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.