சென்னை

கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார்

திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜெ அன்பழகனுக்குக் கடந்த 2 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அன்பழகன் முதலில் 80% வரை வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்தார்.

இப்போது அவர் உடல் நிலை சற்று முன்னேறி அவர் 45% வெண்டிலேட்டர் உதவியுடன் உள்ளார்.

இந்த தகவலை கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்பழகன் விரைவில் குணம் அடைந்து கட்சிப்பணியை தொடர்வார் எனவும் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.