சென்னை:
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது வேதா இல்லம், நினைவில்லம் ஆக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் வாரிசு தாங்கள்தான் என்று அறிவிக்கக்கோரி, அவரின் அண்ணன் மகன் ஜெ.தீபக்கும், மகளான தீபாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தீர்ப்பில், ஜெயலலிதாவின்  அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ.  தீபக் மற்றும் ஜெ. தீபா சட்டப்படி வாரிசுகள் என்று  உயர்நீதிமன்றம் அறிவித்தது.

ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா மற்றும் தீபக் உரிமை உண்டு என்றும்,  ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து  தமிழகஅரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும்,  போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும்  முதல்வரின் அலுவலகமாக மாற்றலாம் என்றும் பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின்  போயஸ் கார்டன் வீட்டின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி ஜெ. தீபக் சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார்.