சசிகலாவின் கணவர் நடராசன் உடலுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் அஞ்சலி செலுத்தினார்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன், உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். இதையடுத்து, அவரின் உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது  இல்லத்தில் கொண்டுவரப்பட்டது.

இன்று காலை 11 மணி வரை பெசன்ட் நகர் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட இருப்பதாகவும், அதன் பிறகு அவரது சொந்த ஊரான தஞ்சை விளாருக்கு எடுத்துச்செல்லப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் அவருக்கு அஞ்சலிசெலுத்தவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.