ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு முதல் இன்று மதியம் வரை நீடித்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவமும், போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தேடுதல் வேட்டையின்போது, தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சேவா உலார் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு அப்பகுதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். நேற்றிரவு முதல் விடிய, விடிய நீடித்த இந்த துப்பாக்கி சண்டை, இன்றும் தொடர்ந்தது.

பிற்பகல் வரை நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுவதாகவும், கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.