நியூசிலந்து:
நியூசிலந்துப் பொதுத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா தொற்று பரவலின் காரணமாக செப்டம்பர் 19 அன்று நடைபெறுவதாக இருந்த நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தல் நான்கு வார காலங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் நடப்பு பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்னின் தொழிலாளர் கட்சியும், ஜூடித் காலின்ஸின் தேசியவாத கட்சியும் போட்டியிட்டன. இந்நிலையில் 87 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜெசிந்தா ஆர்டர்னின் தொழிலாளர் கட்சி 48.9 சதவிகித வாக்குகளையும், தேசியவாத கட்சி 27 சதவிகித வாக்குகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் நியூசிலாந்து பிரதமராக 2-வது முறையா ஜெசிந்தா ஆர்டன் பொறுப்பேற்க உள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் இத்தகைய பெரும்பான்மையுடன் ஒரு கட்சி வாக்குகளைப் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.