சென்னை:

ழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை கலைய வேண்டும் என்பது உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று  தலைமைசெலயகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை செயலகம் செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், சென்னை வாலாஜா சாலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில்  குவிந்தனர். அவர்கள் அந்த சாலையில் திடீல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர்களை தடுத்த போலீசார் அவர்களை கைது செய்து வருகின்றனர். சுமார்  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோ சென்னை கோயம்பேடு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.