சிட்னி: முதலாவது டி-20 போட்டியில் பேட்டிங் செய்யும்போது, பந்து தலையில் தாக்கியதால் மன அதிர்ச்சி ஏற்பட்டதால், எஞ்சிய இரண்டு டி-20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா.

ஜடேஜா பேட்டிங் செய்தபோது, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து, ஜடேஜாவின் ஹெல்மெட்டின் முன்பகுதியில் தாக்கியது. இதனால், அவருக்கு மன அதிர்ச்சி ஏற்பட்டது. அந்தப் போட்டியிலேயே அவர் பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் களமிறங்கினார்.

ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில், ஜடேஜாவின் செய்லபாடு சிறப்பாக இருந்தது. குறிப்பாக, பேட்டிங்கில் கலக்கினார்.

இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சி இன்னும் நீங்காத காரணத்தால், எஞ்சிய இரண்டு டி-20 போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றும், தேவைப்பட்டால் அவர் காயம் தொடர்பாக ஸ்கேன் செய்யப்படும். அவர் டிரெஸ்ஸிங் ரூம் திரும்பிய பிறகுதான், அவருடைய காயத்தின் தன்மை குறித்து தெரியவந்தது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.