கோவை,

கோவை பகுதி மாணவர்கள் கொடிசியா மைதானத்தில் ஒன்று கூடும் நிகர்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

இதில்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசை கண்டித்தும், உடனே தடையை நீக்க கோரியும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இன்று (12/01/2017) கோவையில் மாலை 4 மணிக்கு கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் வேர் சமூக  அமைப்பும், அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் மாபெரும்  கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கோவை சுற்றுவட்டார பகுதி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கோவையை நோக்கி திரண்டு செல்கின்றனர்.

இந்த மாபெரும் திரள் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவாகவும், மத்திய மாநில அரசை தடையை நீக்க வற்புறுத்தியும் குரல்கொடுக்கப்படும் என தெரிகிறது.

சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்காத நிலையில், மாணவர்கள் ஒன்று கூடுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக கோவை கொடிசியா பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.