புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் ஜல்லிக்கட்டு நடந்தபோது, காளை முட்டி மோகன், பாண்டியன் ஆகிய இருவர் பலியானார்கள்.

ஜல்லிக்கட்டு களத்தில் உயிரிழந்த மாடுபிடி வீரர் மோகன் ஐக்கம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் அந்த கிராமத்திலேயே முதல் பட்டதாரி ஆசிரியர் ஆவார்.

மேலும் மாடுமுட்டி காயமடைந்த 83 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில், கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னிலையில் மக்களின் எதிர்ப்புக்கு  இடையே அவசர அவசரமாக இந்த ஜல்லக்கட்டு ஏற்பாடு நடைபெற்றது.   போதிய ஆம்புலன்ஸ்கள் ,  அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் அளவுக்கான உபகரணங்கள் இருக்க வேண்டும். என்பது போன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை. ஆகவேதான் இருவர் பலியாக நேரிட்டது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.