மதுரை:

மதுரை அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும்,  இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு, இந்த பொங்கலுக்கு முன் வந்தவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப்பில்லை என சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவித்துவிட்டது.

இது தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இந்த நிலையில், இன்று மதுரை அருகே உள்ள கரிசல்குளம் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை பிடித்து வருகின்றனர். சுமார் 22 காளைகளை கொண்டு இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.