சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்களின்  அமைதிப் போராட்டம் அற்புதம் என பிரபல கிரிக்கெட் வீரர் ஷேவாக் கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் அமைதியான முறையில் நடத்தி வரும் போராட்டம் பார்க்க அற்புதமாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக மக்களின்  அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை பார்க்க அற்புதமாக இருப்பதாகவும். தமிழக மக்கள் தங்களது உணர்வுகளை அமைதியான முறையில் தொடர்ந்து வெளிப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைதியான முறையில் மக்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்வது அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும்.

இவ்வாறு பிரபல கிரிக்கெட் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.