சென்னை:

மிழகத்தில் இந்த மாதம் 2 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி வரும் தமிழக அரசு, ஜனவரி 16ந்தேதி திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்து உள்ளது.

அதுபோல ஜனவரி  21ம் தேதி வள்ளலார் தினம் கடைபிடிக்கப்படுவதால், அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாககூறி உள்ளது.

மேற்க  இரண்டு நாட்களும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும், இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை  செய்யப்படும்  டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து மதுபானக் கடைகளைகள், பார்கள் அனைத்தும் 2 நாட்கள் முடப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.