சண்டிகர்: இந்திய கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில், ஈட்டி எறிதல் பிரிவில், ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா, புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் ஏற்கனவே, ஈட்டி எறிதலில் தேசிய சாதனைப் படைத்திருந்தார். தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.

இவர், தனக்கான ஐந்தாவது வாய்ப்பில், இவர் அதிகபட்சமாக 88.07 மீட்டர் தூரம் எறிந்தார். இது புதிய தேசிய சாதனையாக மாறியது. இவர், இதற்கு முன்னதாக இந்தோனேஷியாவில் நடைபெற்ற போட்டியில், 88.06 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இவர், ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டிக்கு தகுதிப‍ெறுவதற்கான இலக்காக 85 மீ தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.