சென்னை:

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் இன்று தனது விசாரணையை தொடங்குகிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான  விசாரணை ஆணையம் இன்றுமுதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தல் உள்ள மர்மம் குறித்து விசாரணையை தொடங்குகிறார்.

கடந்த ஆண்டு மரணம் அடைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுமார் 70 நாட்கள் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் நலம் தேறி வருகிறார் என்று கூறிக்கொண்டே, கடைசியில் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும், எதிர்கட்சி யினரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இதையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து முதல்வர் எடப்பாடி தலைமையிலான  தமிழக அரசு கடந்த செப்டம்பர்.25-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, செப்டம்பர்.29-ம் தேதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அதன்படி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி  ஆறுமுகசாமி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, இன்று முதல் ஆணைய அலுவலகத்தில் தனது விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி தொடங்குகிறார்.

இதன் காரணமாக சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.