சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் இன்று தமிழக அரசின் முன்னாள் சிறப்பு செயலாளர் சாந்தா ஷீலா நாயர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆஜர் ஆனார்கள்.

தமிழக  மறைந்த முதல்வர்  ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில்,  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. அந்த விசாரணை கமிஷன் ஜெ. மரணம் தொடர்பாக, அவரது உதவியாளர் உள்பட மருத்துவர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட சசிகலாவின் உறவினர்களிடமும்  விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று,  விசாரணை ஆணையத்தின் முன்பு  தமிழக அரசின் முன்னாள் சிறப்பு செயலாளர்  சாந்தஷீலா நாயர்,  சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், சீருடை பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் திரிபாதி, ஏடி.ஜி.பி.அம்ரேஷ் புஜாரி, தாமரைக் கண்ணன், டிரைவர் கண்ணன் ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.