சென்னை,
முதல்வர் ஜெயலலிதா முழு குணமடைந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இயற்கை அன்னையை யாசிக்கிறேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
jeya-vaiko
இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “முதல்வர் ஜெயலலிதா மிகத் துணிச்சலான பெண்மணி. எத்தனையோ இடர்களை வெற்றிகரமாக கடந்து வந்தவர்.
சட்டமன்றத்தில் அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்ட பிறகும் தன்னந்தனியாக அத்தனை கேள்விகளையும் எதிர்கொண்டு பதில் அளித்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா முழு குணமடைந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இயற்கை அன்னையை யாசிக்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்