சென்னை:
திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலிலதா நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு சுமார் 10.40 மணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தி பரவியதும் அ.தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
jaya-650_051311033836
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மருத்துவமனை நிர்வாகம், “முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல் நலம் நன்கு தேறிவருகிறது. மாலையில் அவர் வீடு திரும்புவார். அதே நேரம் அவர் தொடர் கண்காணிப்பில் இருக்கவேண்டும்” என்று தெரிவித்தனர்