சென்னை:

ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை ஆணையத்தில்,  சிபிசிஐடி ஐஜி தாமரைக்கண்ணன் ஆஜர் ஆனால்.

மேலும், ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த வெங்கட்ரமணனும் ஆஜராகி உள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக  தமிழக அரசால் அமைக்கப்பெற்ற  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி  விசாரணை ஆணையத்தில்,  ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், அவர்கள் வீட்டில் பணியாற்றியவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் சிபிசிஐடியின் ஏடிஜிபி அம்ரீஷ் புஜாரி ஆஜரான நிலையில் , இன்றைய விசாரணையின்போது, ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த வெங்கட்ரமணன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

அதுபோல, சிபிசிஐடி ஐஜி தாமரைக்கண்ணனும் இன்று ஆஜராகி உள்ளார்.

தாமரைக்கண்ணன், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, நுண்ணறிவுப்பிரிவு கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.