சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதான் அண்ணன் மகனான ஜெ.தீபக் ஆஜரானார்.

நேற்றைய விசாரணைக்கு ஜெ.தீபா ஆஜரான நிலையில் இன்று தீபக் ஆஜராகி உளளார்.

சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள கலசமகாலில்,  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையம் ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜெ.அண்ணன் மகனான  தீபக்கிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா விசாரணைக்கு ஆஜரானார். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஜெயலலிதா தாக்கப்பட்டதற்கான ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் கொடுத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.