சென்னை:
ருத்துவமனையல் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்த அறிக்கையை வெளியிடக்கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது.
aa
ராமசாமி தனது மனுவில், ”கடந்த 22ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது முழுமையில்லாத அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
ஆளுநர், மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் சென்று பார்த்த நிலையில் அவர்களும் முழுமையாக தகவல்களை வெளியிடவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் பல்வேறு இடங்களில் கடையடைப்பும் நடத்தப்படுகிறது. முதலமைச்சரின் புகைப்படங்களை வெளியிட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து கொண்டே பணிகளை கவனிப்பதாகக் கூறப்பட்டாலும் அது தொடர்பான உண்மையான விவரங்கள் வெளியிடப்படவில்லை. காவிரி உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் யார் முடிவெடுக்கிறார்கள் என தெரியவில்லை. இது தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை” என்று  குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு டிராபிக் ராமசாமி கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் முறையீடு செய்தார்.
வழக்கு பட்டியலிட்ட பின்னரே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறிய நீதிபதிகள், மனு மீதுதமிழக அரசு கருத்துத் தெரிவித்த பிறகு, வியாழக்கிழமை பரிசீலித்து, மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்யப்படும் என்றனர்.
மேலும், அரசு அதிகாரிகளின் கருத்தை அறிந்து தெரிவிக்க அரசு வழக்கறிஞரிடம் கூறினர். தனிநபர் சுதந்திரம் இருக்கிறது. இருந்தாலும் அரசின் நிர்வாகத்தை கவனித்து வரும் அவரின் உடல்நிலை குறித்து மக்கள் அறிந்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு வருகிறது.