ஜெயலலிதா ஆவி பேட்டி
ஜெயலலிதா ஆவியுடன் பேட்டி என்று அறிவித்தவுடன் ஏராளமான வாசகர்கள், “இதைக் கேளுங்கள்” என்று ஆர்வத்துடன் கேள்விகளை அனுப்பினார்கள்.   அந்த கேள்விகளுடன், “ஆவி” ராஜா என்கிற மீடியேட்டரை தொடர்புகொண்டோம்.  அவர் “ வி நேரடியாக பேசாது. ஒரு உடலில் புகுந்துதான் பேசும்.,  அதுவும் நான்தான் கேள்விகளைக் கேட்க முடியும். ஆகவே என்னிடம் கேள்விகளைக் கொடுங்கள். நான் கேட்கிறேன்” என்றார்.
கேள்விகளுக்கிடையே துணைக்கேள்வி கேட்க முடியாத நிலை.
மேலும் ஆவி ராஜா, “சிறிது நேரம்தான், ஒரு உடலில் தங்கும். ஆகவே இத்தனை கேள்விகள் கேட்க முடியாது” என்றார். அவரே கேள்விகளைத் தேர்ந்தெடுத்து கேட்பதாகச் சொன்னார்.
இதற்கும் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை.
ஆவியுடனான பேட்டிக்குத் தயாரானோம்.
ஒரு அறை.
கதவுகள் சாத்தப்பட்டு, மெல்லிய விளக்கொளி மட்டும்.
ஆவி உடலில் புகுந்து பேசுவதற்கான பெண்மணியை, கட்டிலில் படுக்க வைத்தார்  “ஆவி” ராஜா. கண்களை மூடி ஜெபிக்க ஆரம்பித்தார்.
பிறகு மெல்லிய குரலில் அந்த பெண்மணியிடம், சில மந்திரங்களைக் கூறினார். அடுத்தாக ஜெயலலிதாவின் ஆவியை அழைத்தார்.
அதுவரை கண்களை மூடிப்படுத்திருந்த அந் பெண்மணியின் உடல் திடுமென தூக்கிப்போட்டது. ஹூம்.. ஹூம்.. என்று உதட்டைக் கோணலாக்கி முனக ஆரம்பித்தார்.
அடுத்து முனகலாக, “நான் ஜெயலலிதா வந்திருக்கேன்” என்றார்.
இனி நடந்த உரையாடல்…
அம்மா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் இங்கே வந்திருப்பதற்கு மிகவும் நன்றி. இப்பொழுது உங்களிடம் சில கேள்விகள் கேட்க தாங்கள் எங்களை அனுமதிக்க வேண்டும்.
 நீங்க யாரு?
நான் ராஜா என்ற நபர். ஆவிகளிடம் தொடர்பு கொள்பவர்.
என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?
நாட்டில் மக்கள் பல குழப்பங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆதலால் தாங்கள் விளக்கம் அளிக்க உங்களை அழைத்துள்ளேன்
 என்ன விளக்கம்?
மருத்துவமனையில் சேர்ந்த அன்று உங்களுக்கும் உங்களது உடன் பிறவா சகோதரி சசிகலாவுக்கும் சண்டை நடந்ததாக சொல்லப்படுகிறது. அதை பற்றி தாங்கள் தெளிவாக சொல்ல வேண்டும்.
எங்களுக்குள் சண்டை இல்லை. உடல் நலம் கெட்டுருச்சு. மயக்கம் போட்டு விழுந்துட்டேன். தொண்டையில வலி. ஆஸ்பத்திரியில இருந்தேன். சசி என் கூட தான் இருந்தா.
நீண்ட நாட்கள் மருத்தவமனையில் சிகிச்சையில் இருந்தீர்கள். சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்படுகின்றன. அங்கு என்ன நடந்தது என்பதை சொல்லுங்கள்?
அங்க டிரீட்மென்ட் நடந்தது. அவ்வளவு தான். வேற எதுவும் இல்லை. டிரீட்மென்டில் இருந்தேன். மயக்கத்தில் இருந்தேன். நினைவு இல்லை
 உங்கள் அய்யங்கார் ஜாதி சடங்குகளின் படி இறுதிச் சடங்குகள் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. உங்கள் ஆன்மா சாந்தி அடைந்ததா.  தங்கள் ஜாதி சடங்குகள் செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள். செயல்படுத்துகிறோம்.
அது. நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். தவிர, எனக்கு யாரும் இல்லாதது நாள என் தோழி தான் செய்தார். அவ்வளவு தான். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. அவுங்க கடமையை அவுங்க செஞ்சாங்க. இதற்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம்
கடைசியாக நீங்கள் யாரிடம் என்ன பேச வேண்டும் என்று விரும்பினீர்கள்….
மக்கள். மக்கள்
 நடிகர் அஜீத்தை சந்திக்க விரும்பினீர்களா, அவரை உங்கள் அரசியல் வாரிசாக ஆக்க விரும்பினீர்களா?
 இல்லை. அவர் சினிமா நடிகர். அவர் நடித்த படத்தை பார்த்து பாராட்டத்தான் அவரை அழைத்தேன். மற்றபடி அரசியலுக்காக நான் யாரையுமே கூப்பிடவில்லை.
 அடுத்த பிறவி எப்பொழுது எங்கே எடுப்பீர்கள்
 நான் இங்கே இருந்து செல்லவே நீண்ட நாட்களாகும். எனக்கு இங்கேயே கடமைகள் இருக்கின்றன.  அதை யார் மூலமாவது நிறைவேற்றிவிட்டு தான் செல்ல வேண்டும். அதுவரை இங்கேயே தான் இருப்பேன்.
 நீங்கள் எடுத்த பல முடிவுகளுக்கு.. கருத்துக்களுக்கு.. எதிரான முடிவை  முதல்வர் ஓ.பி.எஸ் எடுத்து வருவதாக ஒரு கருத்து உள்ளதே அது பற்றி..
அவர் நல்ல மனிதர். மாற்று கருத்து என்பது சூழ்நிலையை பொறுத்தது. மற்றபடி அவர் மாறிவிட்டார், மாறவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.
 தீபா.. தீபக் இவர்கள் இருவரும் அரசியலுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?
 அது அவர்கள் விருப்பம். நான் யாரையும் சொல்லவில்லை. என்னிடத்தில் எனது இடத்தில் இருந்து சசிகலா பார்த்துக் கொள்வார். ஓபிஎஸ் உறுதுணையா இருப்பார். இது தான் முடிவு
 உங்கள் சொத்துகளுக்கு வாரிசு யார்?
 அதை கோர்ட் முடிவு செய்யும்.  மனிதர்கள் அல்ல.
 மக்களால் நான், மக்களுக்காக நான் என்றீர்கள். உங்கள் சொத்துக்களை அரசுடமையாக்க விருப்பமா?
எனது சொத்துக்களை நான் எடுத்துக் கொண்டு செல்லவில்லை. அதை யார் யார் அனுபவிக்க போகிறார்கள் என்பதும் எனக்கு தெரியாது. இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை . மக்கள் மட்டுமே என் சொத்தாக நான்…. (முனகுகிறார்)
கட்சியில் இருந்து  உங்களால்   நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் உங்களது உடலை சுற்றி நின்றதை பார்த்தீர்களா
பார்த்தேன்.. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்
சசிகலா பொதுச் செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆகலாமா?
 என்னுடன் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளார். அரசியல் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். வருவதும் வராததும் அவர் விருப்பம். மற்றபடி வேறு ஒன்றுமில்லை. 
 சசிகலாவுக்கு ஆங்கிலம் நன்றாக தெரியுமா?
 ஒரளவுக்கு…. ஆனால், என்னளவு அவரால் பேச முடியாது.
 மேலோகத்தில் உங்கள் அம்மா எம்ஜிஆர் ஆகியோர் உங்களை வரவேவற்றார்களா? எப்படி வரவேற்றார்கள்?
 நான் இன்னும் அங்க செல்ல நேரமில்லை. இங்கே தான் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு தான் போக வேண்டும்.
அரசியலில் நீங்கள் முதலமைச்சருக்கும் மற்றவர்களுக்கு துணையாக இருந்து செயல்படுவீர்களா?
 கண்டிப்பாக. அவர்கள் நல்லாட்சி புரிந்தால் அவர்களுக்கு துணையாக இருப்பேன். இது தாய் மீது ஆணை. மக்கள் மீது ஆணை.
 உங்கள் நண்பர் மறைந்த துக்ளக் சோ,மேலோகத்திலும் தங்களுக்கு தகுந்த ஆலோசனை சொல்கிறாரா?
அவர் என் இனிய நண்பர். எனக்கு உறவினராக வந்திருக்க கூடியவர். ஆனால் இனிய நண்பராக கிடைத்தார்.
அவர் இப்போழுது ஆலோசனை வழங்குகிறாரா துணையாக இருக்கிறாரா?
ஆம் ஆம்
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, என்ன ஆகும் என்று சொல்லுங்கள்
தீர்ப்பு யார் கையிலும் இல்லை
நீங்கள் இருக்கும் போது உங்கள் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் போஸ்டர்கள் நிறைய அடிக்கப்படும். உடல் நல குன்றிய பிறகு, மறைந்தபிறகு போஸ்டர்கள் இல்லையே?
 எல்லோரும் அதிர்ச்சியில இருந்தார்கள். அது தான் உண்மை. என்ன செய்வது என்று புரியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் தடுமாறி கொண்டிருந்தார்கள்.
நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை.
எனக்காக என் மக்கள் அழுதார்கள். அது ஒன்றே எனக்கு போதுமானது.. போதும்..போதும்..  (அழுகிறார். பிறகு…) நான் செய்த நல்லவைகளுக்கு என் மக்கள் போதும்.. போதும்.. (அழுகிறார்.)
 சாந்தமாக இருங்கள்..   நீங்கள் இந்த உடலை விட்டு நிதானமாக, இந்த உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் நிதானமாக வெளியேறும்படி கேட்டுக் கொள்கிறேன்.. (இருமுகிறார்)  எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் நிதானமாக இந்த உடலை விட்டு வெளியேறும்படி நிதானமாக வெளியேறும் படி கேட்டுக் கொள்கிறேன்.
அந்த பெண்மணியின் உடல் லேசாக துள்ளுகிறது. முனகுகிறார். பிறகு இயல்பு நிலைக்கு வருகிறார்.
நாம் விடைபெறுகிறோம்.
[embedyt] http://www.youtube.com/watch?v=FWxnw_KDLHA[/embedyt]