சென்னை,

டைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஜெயலலிதா கைரேகை வைத்த விவகாரத்தில் உத்தரவு. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜெயலலிதாவின் கைரேகையை ஏற்று அ.தி.மு.க வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் இன்றைய விசாரணையின்போது, இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ போஸ் வெற்றிக்கு எதிரான வழக்கில், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  பி-படிவத்தில் ஜெலலிதாவின் பெருவில் சேரகை வைக்கப்பட்டிருந்தது. இதில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.