சென்னை:
ருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதா விரைவில் தனது பணிக்கு திரும்புவார் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.
0
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் அவர் எப்போது இல்லம் திரும்பவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன் “முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதயம் நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் பணிக்கு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார்.