நேற்று இரவு மரணமடைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது.
நேற்று இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் இருந்து பொது மக்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் அவரது குடும்ப விவரங்கள் மற்றும் முகவரி, இறப்பு நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.
அந்த சான்றிதழில் சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) டாக்டர் செந்தில்நாதன் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த சான்றிதழ் 6-ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
jeya-deth-certificate