சென்னை,

றைந்த முன்னாள் முதல்வருக்கு மணி மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், அரசுக்கும், மாநகராட்சிக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு அரசு சார்பில் பிரமாண்ட மணி மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் எழுப்ப தடைவிதிக்கக்கோரி வழக்கறிஞர் துரைசாமி பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்பதால், அவருக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்று மனுவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிப்படி 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடற்கரையில் கட்டுமானப்பணி கூடாது எனவும் வழக்கறிஞர் துரைசாமி மனுவியில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும்  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைக்கப்பட்டது.