சென்னை:

ஜெயலலிதாவின் தோழியும், முன்னாள் எம்எல்ஏவுமான பதர் சயீத், அதிமுகவில் இருந்து விலகி திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சயீத். திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த இவர் அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சராக வும் பதவி வகித்தவர். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் இருந்தவர். ஜெ.மறைவுக்கு பிறகு அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்த அவர், தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இன்று காலை காங்கிரஸ் கட்சியின் தலைமைகமான சத்தியமூர்த்தி பவன் வந்த பதர் சயீத், அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு உடனடியாக மாநில செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

பதர் சயீத் கடந்த 2014ம் ஆண்டும் அதிமுகவில் இருந்து விலகி, ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.  இவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு திருவல்லிக்கேணி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தார்.