சண்டிகார்:

பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் பாட்டியாலா மாணவர் ஜெயேஷ் சிங்ளா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றார். அவரது நண்பர் ஸ்ரே சிங்ளா 99.99 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், ஜேஇஇ மெயின் தேர்வை, முதல் முறை எழுதி அதிக மதிப்பெண் பெற்றனர்.

இது குறித்து ஜெயேஷ் கூறும்போது, “நானும் ஸ்ரே சிங்ளாவும் சண்டிகாரில் ஒரே மையத்தில் பயிற்சி பெற்றோம். ஒரே அறையில் தங்கினோம். 10-ம் வகுப்புக்கு பிறகு சமூக வலைதளங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டேன். எங்கள் பயிற்சி மையம் அறிவுறுத்தலின்படி, வாட்ஸ்-அப் இல்லாத சாதாரண போனையே பயன்படுத்தினேன்” என்றார்.