வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடம் என பல தளங்களில் நடித்துள்ள ஜீவன், ‘பாம்பாட்டம்’ என்ற புதிய படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

வி.சி. வடிவுடையான் இயக்கும் இந்த படத்தில் முதன் முறையாக ஜீவன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக ஒரு கேரக்டர்.

மற்றொரு கேரக்டர் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ள்து.

இந்தியா முழுமைக்குமான ரசிகர்களை கவரும் ‘பான் இந்தியா’ படமாக உருவாகும் ‘பாம்பாட்டம்’ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், ரித்திகா சென் ஆகியோருடன் மல்லிகா ஷெராவத்தும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

’70 களில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள ‘பாம்பாட்டம்’ ஆக்‌ஷன் கலந்த திரில்லர் கதையாகும்.

“நான் ஒரே படத்தில் பல வேடங்களில் நடித்திருந்தாலும், இரண்டு வேடத்தில் நடிப்பது முதன் முறை என்பதால் இது எனக்கு ஸ்பெஷல் படம்” என்கிறார், ஜீவன்.

– பா. பாரதி