டில்லி

டில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானத்தின் இறக்கை சரக்கு வேன் மீது மோதியது

நேற்று இரவு துபாயில் இருந்து கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானம் டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது.   அந்த விமானம் இறங்கிய மூன்றாவது முனையம் ரன் வேயின் ஓரத்தில் சரக்கு வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.    தரை இறங்கிய விமானத்தின் இறக்கை அந்த சரக்கு வேன் மீது மோதியது.

இதனால் விமானம் வேகமாக குலுங்கவே பயணிகள் பதட்டம் அடைந்தனர்.    விமான ஓட்டியின் கவனக்குறைவால் இவ்வாறு மோதியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இதனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.   விமானத்துக்கு இந்த மோதலால் ஏற்பட்ட சேதம் குறித்து பரிசோதிக்கப்பட உள்ளது.