சென்னை,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் டிடிவி தினகரன் உள்பட சசி உறவினர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ள நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் ஜெ.மரணம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே அரசு மற்றும் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெ.தீபா, மாதவன் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்து உள்ளது.

இந்நிலையில், ஜெ. மரணம் தொடர்பாக சசிகலாவின்  உறவினர்களான டிடிவி தினகரன், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், ஜெ. சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 7 நாட்களுக்குள் ஒப்படைக்குபடி உத்தரவிடப்பட்டுள்ளது.