சென்னை:

ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் இன்று ஆஜர் ஆனார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே ஜெ. மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சசிகலா உறவினர்கள், ஜெ. வீட்டு வேலைக்காரர்கள், அவரது உறவினர்கள்,  பொதுமக்கள் உள்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்திய நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெ.வீட்டு சமையல்காரர் ராஜம்மாள் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில்,  ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐய்யப்பனுக்கும் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

இதன்படி இன்று ஐயப்பன்,  விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராரானார். இவர் ஜெயலலிதாவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டி வருவது குறிப்பிடத்தக்கது.