மன்சூர் அலிகான்

மிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளில ராகேஷ் சவந்த்தின் தயாரிப்பு மற்று் இயக்கத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் அமாவாசை.  சையது அகமது  இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மன்சூர் அலிகான் வழக்கம்போல அதிரடியாக பேசினார்.

அவர், “இந்த “அம்மாவாசை” பட பேனர்களில் அம்மாவின் நல்லாசியுடன் என ஜெவோட போட்டோவ போட்டு இருக்காங்க… அவங்க நல்ல ஆட்சிதான் பண்ணினாங்க ஆனா அவங்க கூட இருந்தவங்க அவங்களை கொன்னுட்டதா சொல்றாங்க .. அவங்க  நாலு  நாயை வளர்த்திருந்தாக்கூட கொன்னவங்களை கடிச்சி, காலடியில் போட்டுருக்கும்.

“அமாவாசை” இசை வெளியீடு

பாத்ரூம்லக் கூட இப்போல்லாம் சிசிடிவி வச்சிருக்காங்க … ஆனா போயஸ் கார்டன்லயும் , அப்பல்லோ ஹாஸ்பிடல் லயும் கேமிராவே இல்லையாம் …. இத எப்படி நம்புறது ?” என்று கேள்வி எழுப்பினார்.