ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, மாநிலத்தில் காங்கிரஸ், ஜேஎம்எம் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.

81 தொகுதிகளைக்கொண்ட ஜார்கண்ட் மாநிலத்துக்கு  5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 11 மணி  நிலவரப்படி, காங்கிரஸ் + ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + ராஷ்ட்ரிய ஜனதா தள் – கூட்டணி  43 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பா.ஜ.க – 27 இடங்களிலும், ஏ.ஜே.எஸ்.யூ – 3 இடங்களிலும்,   ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா – 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இதன் காரணமாக, மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.