ராஞ்சி

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் பாஜகவை ஜார்க்கண்ட்மக்கள் தோற்கடிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தற்போது நடந்து வருகிறது.  இந்த மாநிலத்தில் மொத்தம் 81 சட்டபேர்வை தொகுதிகள் உள்ளன.   இந்த சட்டப்பேரவை தொகுதி தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கான வாக்கெடுப்பு நடந்தது.  இன்று 20 தொகுதிகளுக்கான 2 ஆம் கட்ட வாக்கெடுப்பு நடந்து வருகிறது.  தற்போது இந்த மாநிலம் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.  அப்போது அவர், “ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் காவிக் கட்சி ஒரு பக்கமும் மதச்சார்பற்ற முன்னேற்றக் கட்சி கள் ஒரு பக்கமும் உள்ளன.

நாம் அரியானாவில் பாஜக அரசை ஒதுக்கி உள்ளோம்.  மகாராஷ்டிராவில் ஆட்சி பொறுப்பு அளிக்க மறுத்துள்ளோம்  இப்போது ஜார்க்கண்ட் மக்கள் பாஜகவை தோல்வி பெற செய்ய வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.