ஆர்.பி சௌத்ரியின் மகனான ஜீவா தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் முதன்முதலில் அறிமுகமானார்.
கடைசியாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான ரௌத்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது தந்தையின் நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் சசியிடம் உதவியாளராக பணியாற்றிய சந்தோஷ் ராஜன் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு எண் 91 எனக்குறிப்பிடப்படுகிறது.
இப்படத்தில் ஜீவாவுடன் காஷ்மீரா பர்தேஷி, ப்ரயாகா நாக்ரா, விடிவி கணேஷ், சித்திக், ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.