நியூயார்க்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபரான ஜாய் பிட்டன் போட்டியிட முடிவு செய்துள்ளார்.


2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபோது, ஜியோ பிட்டன் துணை அதிபராக பதவியேற்றார்.

அமெரிக்க செனட்டில் (நாடாளுமன்றம்) நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற பெருமை ஜியோ பிட்டனுக்கு உண்டு.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முடிவை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.

அதன்பிறகு பிரச்சாரத்தையும் தொடங்கிவிடுவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.