கடந்த சில தினங்களுக்கு முன்பு சுஷாந்த் மரணத்தைக் குறிப்பிட்டு ‘இப்போதெல்லாம் தற்கொலை என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது’ என்று ஸ்வஸ்திகா கூறியதாக ஒரு தனியார் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.
ஸ்வஸ்திகாவின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பலரும் அவரைத் திட்டித் தீர்த்தனர்.
https://www.facebook.com/swasmukherjee13/posts/2918344118274812
இந்நிலையில் தான் கூறியதாக பொய்ச் செய்தி வெளியிட்ட நிருபர் மற்றும் தன் மீது ஆசிட் வீசப்போவதாக சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்த இளைஞர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளதாக ஸ்வஸ்திகா தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.