சென்னை:

தினகரன் நாளிதழின் முதுநிலை செய்தியாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்க பொது செயலாளருமான மோகன் இன்று காலை மறைந்தார்.

இவர் சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கல்யாணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது.

மோகனின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் குடியாத்தம். சுதேசமித்திரன், சத்ரியன், ஜூவி, தினமலர் பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.

மோகனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

மோகன் இல்ல முகவரி:

215/144, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, (பாங்க் ஆப் பரோடா ஏ.டி.எம். அருகில் – பார்த்தசாரதி கோயில் வளைவு அருகில்) சென்னை.