டில்லி,

னக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் முன்னாள் நீதிபதி கர்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடியானது.

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக,  முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி பலமுறை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டும், அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் டில்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 28ந்தேதி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,  அரசியல் சாசனப்படி தம்மை சிறையில் அடைத்தது சட்டப்படி தவறு என்றும், எனவே, உச்சநீதிமன்றம் தமக்கு விதித்துள்ள ஆறு மாத சிறைத்தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கீதா மிட்டல், ஹரி சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் கர்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனால், அவர் ஆறு மாத சிறை தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.