மிழகத்தை சேர்ந்த அணு விஞ்ஞானியும், ஏவுகணை நாயகனும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாமின் 5வது  ஆண்டு நினைவு தினம் இன்று.

1931ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ராமேஷ்வரம் என்ற ஊரில் ஏழை பெற்றோருக்கு மகனாக பிறந்த அப்துல்கலாம் உலம் போற்றும் அணு விஞ்ஞானியாக உருவெடுத்தும், இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத்தலைவர் பதவி வகித்து  கடந்த 2015ம் ஆண்டு  ஜூலை மாதம் 27–ந் தேதி இவ்உலகை விட்டு மறைந்தார்.
மறைந்த கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம்  அருகே உள்ள பேக்கரும்பு என்ற பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு  மணி மண்டபம், அறிவுசார் மையம் கட்டப்பட்டு  பொதுமக்கள் பார்வைக்காக  வைக்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வியை தனது சொந்த ஊரில் தமிழ்வழியில் படித்த கலாம், கல்லூரிக் கல்வியை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தொடர்ந்தார். 1954ம் ஆண்டு பிஎஸ்சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.
ஆங்கிலத்தில் புலமைப்பெற யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் ஆங்கிலத்தையும்,  ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணி யத்திடம்  இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
அனைத்து சமுதாய மக்கள் மீதும் பாசம் கொண்ட அப்துல் குலாம் குறள்மீது அளப்பரியா ஆர்வம் கொண்டவர். வீணை வாசிப்பதிலும் ஆர்வம் கொண்ட அப்துல்கலாம் பகவத்கீதை, பைபிள், குரான் உள்பட அனைத்து மத நூல்களையும் படித்தறிந்து ஞானம் பெற்றவர்.
“மாணவர்களே கனவு காணுங்கள்” என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்திய வர். சிறுவர்களுக்கு,  எதிர்கால தலைமுறைக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த செல்போனில் நூலகம் அமைக்கும் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும் என்ற கலாம்,
இளைஞர்களுக்கு, அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்ப ற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் என்று வாழ்க்கை சித்தாந்தத்தையும் கூறி உள்ளார்.
‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’ என்று அடிக்கடி மாணவர்களுக்கு அறிவுரை கூறுவார்.
1998ம் ஆண்டு மே மாதம் 11ந்ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டது. இது அவரது சாதனை மகுடத்தில் பொருத்தப்பட்ட மற்றொரு வைரமாகும்.

நம் நாட்டுக்கபாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் யார் இந்த கலாம் என ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.
நாட்டின் குடியரசுத் தலைவராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
கல்விப்பணியில் தன்னை முழுமை யான அர்ப்பணித்துகொண்ட அப்துல் கலாம், கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே தனது மரணத்தையும் தழுவினார்.
மறைந்த அப்துல் கலாமுக்க  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 30 பல்கலைக்கழகங் கள் அவரது ஆராய்ச்சி சாதனைகளுக்கா கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன.
அது மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பெல்ஜியம் நாடுகளும் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.
அப்துல்கலாமின் சேவையை பாராட்டி, மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
இன்றைய தினம் அவரது 5வது நினைவு நாள்.
அப்துல்கலாமுக்கு பிடித்த திருக்குறள் வீடியோ…