டில்லி:

ரும் 21ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் யோகா தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு பாரதியஜனதா தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றதும், செப்டம்பர் மாதம் நியூயார்க்கில்  உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர்  மோடி பேசும்போது, யோகாவின் பெருமைகள் குறித்தும், அதை சர்வதேச அளவில் கடைபிடிக்க வலியுறுத்தும் வகையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது.  ஐ.நா.வின் அறிவிப்பை பின்பற்றி  உலக நாடுகளில்  யோகாசனம்  குறித்த விழப்புணர்வு ஏற்பட்டு  முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில்  சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.