டில்லி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள ஜே.எஸ்.கேஹர் வரும் 27ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இதையடுத்த தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவை தலைமை நீதிபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு 2009ம் ஆண்டு டிசம்பர் முதல் 2010ம் ஆண்டு மே வரை பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2010ம் ஆண்டு மே 24ம் தேதி முதல் 2011ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி வரை டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார். இவருக்கு தற்போது வயது 63 ஆகிறது.