‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் டிகே மீண்டும் ஒரு பேய்ப் படத்தை இயக்குகிறார்.

இதில் நான்கு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் காஜல் அகர்வால். இதற்கான ஒரு ஃபோட்டோஷூட்டும், மாதிரி படப்பிடிப்பும் சமீபத்தில் சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த புதிய படம், திகிலூட்டும் பேய், பயமுறுத்தும் பேய், நகைச்சுவை செய்யும் பேய் என பலவிதமான பேய்கள் இடம் பெறுமாறு ஒரு வித்தியாசமான கதை என்று கூறப்படுகிறது.