மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்தவர் நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி அவரது பண்ணை வீட்டில் உயிரிழந்தார்.

அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் குடும்பத்தினர் கூறியிருந்த நிலையில் அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

இந்த நிலையில் எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல எனவும், அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட கல்லீரல் நோயால் தான் தான் அவர் மரணத்தை தழுவியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.