மதுரை

சென்னையில் வரும் 13ந்தேதி நடைபெற உள்ள தமிழக அரசின் கலைமாமணி விருது விழாவுக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் கலைமாமணி விருது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி,  பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ்  2011 முதல் 2018 வரையிலான 201 கலை வித்தகர் களுக்கு கலைமாமணி விருதுகள்  அறிவிக்கப் பட்டது. இந்த விருதுகள் வழங்கும்  விழா ஆகஸ்டு 13ந்தேதி (மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு தடை விதிக்கக்கோரி  நெல்லையைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர் எஸ்.மாரியப்பன் என்பவர்  உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்துக்கு உறுப்பினர் தேர்வு முறையில் மாற்றம் செய்யப் பட்டு 2015-ல் 22 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 22 பேரும் எந்த கொள்கை முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  201 பேரை கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்து,  இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் அறிவித்துள்ளார். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவர்கள்,   விதிப்படி 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.. ஆனால் 30 முதல் 40 வயதுக்கு உட் பட்டவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறந்த கலைஞர்களும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். பிற துறைகளைச் சேர்ந்த 3 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இந்தத் தேர்வுப் பட்டிய லுக்கு தடை விதிக்க வேண்டும். ஆக. 13-ல் நடைபெறும் விருது வழங்கும் விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என  கூறப்பட்டிருந்தது.

இந்த மனு  நீதிபதி டி.சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கலைமாமணி விருது விழாவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தவர், கொக்கிலிக்கட்டை ஆட்டத் துக்காக கலைமாமணி  விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கோவிந்தராஜ்,  மரக்கால் ஆட்டக் கலைஞர். இரு கலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

மரக்கால் ஆட்டக் கலைஞரை கொக்கிலிக்கட்டை ஆட்டக் கலைஞராக விருதுக்கு தேர்வு செய் யப்பட்டதை ஏற்க முடியாது என்று தெரிவித்தவர், கடந்த 8 ஆண்டு களாக கலைமாமணி விருது வழங்காதது ஏன் என்பது தெரிய வில்லை என்று கூறினார்.

இனி வரும் காலத்தில், கலைமாமணி விருதுகளை, ஜூன் 30-க்குள் அறிவித்து குறிப்பிட்ட காலத்துக் குள் விருது வழங்க வேண்டும் என்றும் தீர்பில் தெரிவித்து உள்ளார்.