தாணு மற்றும் சிவா
தாணு மற்றும் சிவா

வேந்தர் மூவிஸ் மதன் பண மோசடி வழக்கில் ஆறு மாதம் தேடப்பட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் அதன்பின் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி மதனை 15நாள் புழல் சிறையில் அடைக்கும் படி உத்தரவிட்டார். அதன்பின் போலிஸ் கஷ்டடியில் எடுக்கப்பட்டு மதனை போலிஸ் விசாரித்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து அவர் மாணவர்களிடமிருந்து பெற்ற பணத்தை தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணுவிடமும் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவிடமும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளாராம் இதன் அடிப்படையில் போலிசார் தாணுவையும் சிவாவையும் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகின்றது.