போபால்:

ட்சிக்கு தேவையான பெரும்பான்மை என்னிடம் உள்ளது, நான் ஏன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மத்தியபிரதேச மாநில முதல்வர் கமல்நாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் பெங்களூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிந்தியா  ஆதரவு எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ம.பி.யில் கமல்நாத்துக்கு எதிராக சிந்தியா தலைமையில் 6 அமைச்சர்கள் உள்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பட்டட நிலையில் 16 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் இதுவரை ஏற்கவில்லை. அவர்கள் தன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கிடையில், சட்டமன்றத்தில் கமல்நாத் மெஜாரிட்டி நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்ட நிலையில், சபாநாயகரோ, சட்டமன்றத்தை ஒத்திவைத்து விட்டார். இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பெங்களூரில் அடைத்து வைக்கப் பட்டுள்ள ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க சென்றார். ஆனால், அவரை சந்திக்க காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில முதல்வர், பெங்களூரில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸைச் சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களையும் சந்திக்க திக்விஜய்சிங் விரும்பினார். ஆனால், அவர் சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க அனுமதிக்கவில்லை,

“அவர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் பதவியை செய்ததாகக் கூறி அறிக்கைகள் மற்றும் கடிதங்களை எழுதும்படி கேட்கப்படுகிறார்கள்.”  என்று தெரிவித்தார்.

அவர்களின்  வற்புறுத்தலின் கீழ். அவர்கள் என்ன செய்யப்படுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களில் சிலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் சுதந்திரமாக இருந்தால், நீங்கள் ஏன் அவர்களைச் சந்திக்க முடியாது?  என்ற கேள்வி எழுப்பினார்.

எனது அரசாங்கம் பெரும்பான்மையாக உள்ளது, நான் ஏன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்,  கடந்த 16 மாதங்களில் பல முறை நாங்கள் அதை நிரூபித்துள்ளோம், ” அப்படியிருக்கும்போது, இது எவ்வாறு கவிழும் என்பதைப் பார்ப்போம்” என்றும் சவால் விட்டுள்ளார்.