வரும் 20ம் தேதி முதல் மக்களுடன் பயணம்…..கமல்
சென்னை:
வரும் 20ம் தேதி முதல் மக்களுடனான பயணம் நடைபெறும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
திருப்பூர், தாராபுரம், காங்கேயம், பல்லடம், பொன்னிவாடியில் இந்த பயண நிகழ்ச்சி நடைபெறும். அனைத்து செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.